வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் வழமைக்கு மாறாக பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை நகரப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் அதிகாலை முதலே குவிக்கப்பட்டுள்ளதுடன் அணி அணியாக ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் முக்கிய சந்திப்புகளிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடைபெறுகின்ற சூழலில் அதனை இலக்காகக் கொண்டே குறித்த நடவடிக்கை தீவிரம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேவேளை இராணுவத்தினரின் பவள் கவசவாகனமும் அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை