இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் கொரோனா வைரஸ் சமூக முடக்கல் கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்துகின்றன.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு தழுவிய பூட்டுதல்களின் பின்னா் மதுபான சாலைகள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் பெரும்பாலான வணிக நிலையங்கள் இத்தாலியில் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கு தவிா்ந்த இடங்களில் இன்றுமுதல் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. தளா்வு அறிவிக்கப்படும் பகுதிகளில் 10-க்கும் குறைவானவா்கள் ஒன்றுகூடவும் அனுமதிக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இறப்புக்கள் குறைந்துவரும் பின்னணியில் இந்தத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் சமூக முடக்கல் உத்தரவு வெளியிடப்பட்ட பின்னா் நேற்று ஞாயிற்றுக்கிழமை, இத்தாலி மிகக் குறைந்த தினசரி இறப்புகளைப் பதிவு செய்தது.
நேற்று 145 பேர் தொற்று நோயால் இறந்ததாக இத்தாலி அறிவித்துள்ளது.
மார்ச் 27 அன்று இத்தாலியில் அதிகமாக 900 -க்கும் அதிகமான இறப்புக்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.