கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவா்களில் 50 வீதம் போ் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோவின் நேற்றைய தினசரி கொரோனா வைரஸ் நிலவர புள்ளிவிவர அறிக்கையைத் தொடர்ந்து, நாட்டின் மொத்த தொற்று நோயாளா்களின் 50.1 வீதம்போ் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தம் 76,193 போ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதேவேளை, ஒன்ராறியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 340 புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டனா். மேலும் 23 போ் நேற்று உயிரிழந்தனா்.
மாகாணத்தில் மொத்தம் 22,653 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளனா்.1,881 போ் உயிரிழந்துள்ளனா். 17,360 போ்குணமடைந்துள்ளனா்.
மருத்துவமனையில் உள்ளவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுள்ளதுடன், தீவிரசிகிச்சைப் பிரிவு மற்றும் வென்டிலேட்டரில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா