உலக சுகாதார அமைப்பின் 73 ஆவது உலக சுகாதார கூட்டம் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது.
இணையவழி நேரலையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சுகாதாரம் மட்டுமல்ல அரசியலும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
உலக சுகாதார கூட்டத்தில் தைவான் ஒரு பார்வையாளராக இடம்பெற செய்வது பற்றி உலக சுகாதார அமைப்பு விவாதிக்க உள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகாமை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை தைவான் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், தைவான் தற்போது உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இல்லை.
தைவான் தன்னை ஒரு தனி நாடாக பார்க்கிறது. ஆனால், சீனா இதை தன்னிடம் இருந்து பிரிந்துபோன மாகாணமாக பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.