Tuesday 16th of April 2024 04:36:35 AM GMT

LANGUAGE - TAMIL
கேபி சர்மா ஒலி
சினா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் கொடியது: நேபாள பிரதமர் பாராளுமனத்தில் பேச்சு!

சினா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் கொடியது: நேபாள பிரதமர் பாராளுமனத்தில் பேச்சு!


சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் கொடியது என நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த வரும் நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி உரையாற்றிய போதே இச்சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார்.

நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி, நேபாளத்தில் இதற்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கொரோனா பரவியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது என்று அவர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் கடந்த மார்ச் 23 ம் திகதி முதலாவது கொரோனா தொற்றாளர் இனம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை 427 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நூறு தொற்றாளர்கள் என்ற இலக்கை அடைவதற்கு 46 நாட்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது கடந்த 13 நாட்களில் மட்டும் 327 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதிலும் கடந்த 9 நாட்களில் மட்டும் 293 பதிய தொற்றார்கள் இனம்காணப்பட்டுள்ளதன் மூலம் அங்கு கொரோனா தொற்றானது வேகமாக அதிகரித்து வருவதை புலப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மே-12 இல் 81 தொற்றாளர்களும் மே-18 இல் 80 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE