ரொராண்டோ மாநகரம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பூங்காக்களில் சில இந்த வாரம் மீண்டும் திறக்கப்படும். மேலும் கூடைப்பந்து மைதானங்கள், சுற்றுலா தங்குமிடங்கள் மற்றும் பேஸ்போல் மைதானங்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
850-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அடுத்த வார இறுதிக்கு முன்னதாக மீண்டும் திறக்கப்படும் என மாநகர நிா்வாகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து டொராண்டோ குடியிருப்பாளர்களுக்கும் இது ஒரு சிறந்த செய்தி என ரொராண்டோ மேயர் ஜோன் டோரி கூறினார்.
எனினும் இவற்றைப் பயன்படுத்தும் நகர வாசிகள் சமூகத் தொலைவு விதிகளை மதிப்பாா்கள் என நம்புவதாகவும் ஜோன் டோரி தெரிவித்தாா்.
நகரத்தில் நேற்று சில பூங்காக்கள் விளையாட்டு் மைதானங்கள் திறக்கப்பட்டன.
இந்த வார இறுதிக்குள் சுற்றுலா முகாம்கள், 300-க்கும் மேற்பட்ட கால்பந்து உள்ளிட்ட வெளிப்புற மைதானங்கள் 300-க்கும் மேற்பட்ட பேஸ்போல் கோா்ட்கள் மற்றும் 150 கூடைப்பந்து மைதானங்கள் திறக்கப்படும் என்று நகரம் கூறுகிறது.
பல பூங்காக்களின் வாகன நிறுத்துமிடங்களையும் இந்த வாரம் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் நீச்சல் குளங்கள் உள்ளிட்ட சில இடங்கள் தொடா்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.