இங்கிலாந்தை சேர்ந்த பிரபல விமான இயந்திர தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ரோய்ஸ் குறைந்தது 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
போயிங் 787 மற்றும் ஏர்பஸ் A350 உள்ளிட்டவைகளுக்கான இயந்திரங்களை ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் விமான போக்குவரத்தை நம்பியே உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
அதனால் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 52,000 ஊழியர்களில் குறைந்தது 9,000 பேர் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த ஊழியர்களில் 5 இல் 1 பகுதியினர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் ஆண்டுக்கு சுமார் 1.6 பில்லியன் டொலர்கள் வரை செலவீனத்தைக் குறைக்க முடியும் என நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
இது மிகவும் நெருக்கடியான சூழல். இதனை நாம் எதிர்கொண்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் பொருளாதார பிரச்னையை சமாளிக்க இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து