ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் 88,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3,000-க்கும் குறைவான உயிரிழப்புகளே இதுவரை பதிவாகியுள்ளன.
சிறப்பான சுகாதார வசதிகளைக் கொண்ட வளா்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக குறைவாக இருக்கிறது. இது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஆப்பிரிக்க நாடுகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி எனவும் ஐ. நா. பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், சுகாதாரத்தில் வலிமையான நாடுகள் கூட ஆப்பிரிக்க நாடுகளின் நடவடிக்கைகளை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளார்.
வளர்ந்த நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அந்தோனியா குட்டரெஸ் , ஐ.நா கணித்ததை விட ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்