Saturday 20th of April 2024 05:46:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்த ஆண்டு இறுதிக்குள் தென்னாப்பிரிக்காவில் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடுமென எச்சரிக்கை!

இந்த ஆண்டு இறுதிக்குள் தென்னாப்பிரிக்காவில் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடுமென எச்சரிக்கை!


தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 40,000 பேர் கொரோனா வைரஸால் இறக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழுவால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அமுலில் உள்ள கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் முதல் தளர்த்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ராமபோசா அறிவித்துள்ளாா்.

கடந்த மார்ச் மாதம் புகையிலை மற்றும் மதுபானவிற்பனை மீதான தடையை உள்ளடக்கிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தது முதல் தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் குறைந்து காணப்படுகிறது.

5.7 கோடி மக்கள் வாழும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 18,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் -19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அடுத்துவரும் மாதங்களில் தொற்றுநோய் மற்றும் இறப்புக்கள் கூா்வையான அதிகரிப்பைச் சந்திக்கக்கூடும் என அரசாால் நியமிக்கப்பட்ட கொவிட் ஆலோசனைக் குழு எச்சரித்துள்ளது.

சாதாரண சூழ்நிலையின் கீழ் ஒகஸ்ட் பிற்பகுதியில் 100,000 போ் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடும். நவெம்பா் மாதத்துக்கு 40 ஆயிரம் வரை உயிரிழப்புக்கள் பதிவாகக் கூடும எனவும் கணிப்பிடப்பட்டு்ள்ளது.

நிலைமை கணிப்பீட்டை விட மோசமானால் பிற்பகுதியில் 120,000 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடும். நவம்பா் மாதத்துக்கு 45 ஆயிரம் வரை உயிரிழப்புக்கள் பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE