Saturday 20th of April 2024 02:10:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தடுப்பு ஆய்வு முயற்சிகளுக்காக  ஒன்ராறியோ 20 மில்லியன் டொலா் ஒதுக்கீடு!

கொரோனா தடுப்பு ஆய்வு முயற்சிகளுக்காக ஒன்ராறியோ 20 மில்லியன் டொலா் ஒதுக்கீடு!


கொரோனா வைரஸ் தொடா்பான ஆய்வுகள், தடுப்பு மருந்தைக் கண்டறிதல் போன்றவற்றுக்கான முயற்சிகளுக்கு ஒன்ராறியோ 20 மில்லியன் டொலா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்வா் டக் ஃபோர்ட், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அமைச்சர் ரோஸ் ரோமானோ ஆகியோா் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய செய்தியாளா் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்தனா்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடா்பான ஆய்வு ஒன்ராறியோவுக்கு மட்டுமன்றி கனடா மற்றும் முழு உலகுக்கும் பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளது என மாகாண முதல்வா் டக் ஃபோர்ட், செய்தியாளர்களிடம் கூறினார்.

கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த போராட்டத்தில் நாங்கள் உலகிற்கு தலைமை வகிப்பவா்களாக இருக்க நான் விரும்புகிறேன். நாங்கள் அவ்வாறு இருப்போம் என்று எனக்குத் தெரியும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

கொவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான 15 உயர்தர மற்றும் நம்பிக்கைக்குரிய திட்டங்கள் மாகாண அரசு நிதியுதவியுடன் முன்னேற்றகரமாக உள்ளன.

ஒன்ராறியோவின் ஆய்வு முயற்சிகளுக்காக 20 மில்லியன் டொலா் உதவித் திட்டத்தின் கீழ் இதற்கான திட்டங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. 15 நம்பிக்கைக்குரிய திட்டங்களுடன் நாங்கள் முன்னோக்கி நகா்கிறோம் என பெருமையுடன் அறிவிக்கிறேன் என முதல்வா் டக் ஃபோர்ட் கூறினாா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE