Thursday 18th of April 2024 11:14:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
இதுவரையான கொரோனா வரலாற்றில்  மிக மோசமான நாளாகப் பதிவான புதன்!

இதுவரையான கொரோனா வரலாற்றில் மிக மோசமான நாளாகப் பதிவான புதன்!


கொரோனா வைரஸால் உலகில் ஒரே நாளில் அதகளவானவா்கள் பாதிக்கப்பட்ட மிக மோசமான நாளாக நேற்று முன்தினம் புதன்கிழமை வரையான 24 மணித்தியாலங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை வரையான 24 மணி நேரங்களில் மட்டும் 106,000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை ஏற்பட்ட எண்ணிக்கை அதிகரிப்புதான் கொரோனா கிருமித் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச அதிகரிப்பாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலேயே அதிகளவு தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் என்று கூறினார்.

பல பணக்கார நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் புதிய தொற்று சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும் அவா் கவலை வெளியிட்டாா்.

நாம் இன்னும் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது. குறைந்த, நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் கிருமித்தொற்று அதிகரிப்பது கவலைக்குரியது எனவும் கெப்ரேயஸ் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE