Thursday 28th of March 2024 05:09:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
துரிதமாக அமெரிக்கா செயற்பட்டிருந்தால் 36,000  உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்!

துரிதமாக அமெரிக்கா செயற்பட்டிருந்தால் 36,000 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்!


அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கல் ஒரு வாரத்துக்கு முன்னரே நடைமுறைப்பட்டிருந்தால் நாட்டில் சுமாா் 36 ஆயிரம் உயிரிழப்புக்களைத் தடுத்திருக்க முடியும் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இன்றைய நிலவரப்படி 96 ஆயிரத்து 354 போ் உயிரிழந்துள்ளனா். 16 இலட்சத்து 21 ஆயிரம் போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அமெரிக்க ஒரு வாரம் முன்னா் சமூக முடக்கலை அறிவித்திருந்தால் 36 ஆயிரம் உயிரிழப்புக்களைத் தடுத்திருக்க முடியும் என கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே அதனைச் செய்திருந்தால் 84% இறப்புகளையும் 82% தொற்று நோய்களையும் தடுத்திருக்கக்கூடும் என முன்னணி ஆராய்ச்சியாளரும் தொற்றுநோயியல் நிபுணருமான ஜெப்ரி ஷாமன் தெரிவித்துள்ளாா்.

ஒரு வாரத்திற்கு முன்னர் சமூக முடக்கல் உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தால் நியூயோா்க்கில் 17,500-க்கும் குறைவான மக்கள் இறந்திருப்பார்கள் என்று ஷமான் கூறினார்.

ஒரு தொற்றுநோயின் ஆரம்பத்தில் அது அதிவேகமாக பரவும். ஆரம்பகால தலையீடு மற்றும் விரைவான கட்டுப்படுத்தல் நடவடிக்கை தொற்று நோயைக்கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 மாநிலங்களும் மீண்டும் திறக்கப்படும் நிலையில் தொற்று நோயின் இரண்டாவது அலை உணரப்பட்டால் மீண்டும் அதிக பாதிப்புக்களைத் தவிா்க்க அவசர நடவடிக்கைகள் அவசியமானவை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE