சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த 1988ஆம் ஆண்டு இரண்டு வயதில் கடத்தி விற்கப்பட்ட தங்களது மகனை 32 வருடங்களின் பின்னர் சந்தித்த பெற்றோா் பூரிப்பு அடைந்துள்ளனா்.
ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு முன்பாக வைத்து இரண்டு வயதாக இருந்தபோது மாவோ கடத்தப்பட்டார்.
அவரைக் கடத்தியவா் சிச்சுவானில் குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு விற்று விட்டார்.
இதனை அறியாத பெற்றோர் அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டனர்.
மாவோவின் முக அடையாளத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவனது தற்போதைய முகத்தை ஊகித்த பொலிஸாா் தேசிய தரவுகள் மூலம் தேடினர்.
இந்த நிலையில் 1980-இல் சிச்சுவானில் குழந்தையை வாங்கிய ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது. விவரங்களை ஆராய்ந்ததில் அது 1988-இல் கடத்தப்பட்ட மாவோ தான் என உறுதி செய்யப்பட்டது.
மரபணு சோதனை மூலமும் அவா் காணாமல் போன மாவோதான் என்பதை பொலிஸாா் உறுதி செய்தனர். மாவோ தாம் கடத்தப் பட்டதுகூட தெரியாமல் தத்தெடுத்த பெற்றோரிடம் வளர்ந்துவந்தார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை பிரிந்த மகனை பெற்றோா் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
2 வயதில் தொலைந்துபோன மகனை 32 வருடங்களில் பின் முதல் முறையாக சந்தித்த பெற்றோர் கதறி அழுதனர். தொலைக்காட்சி பேட்டியில் பேசிய தாயார் லி ஜிங்ஷி, தனது வேலையைக் கைவிட்டு 100,000 துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு பல தொலைக்காட்சி ஒளிவழிகளில் தோன்றி மகனை தேடியதாகக் கூறினார்.
நான் இனி என் மகனை பிரிய மாட்டேன், இனிமேல் அவனை விடமாட்டேன் என்று கூறி மகனின் கையை லி ஜிங்ஷி இறுகப் பற்றிக் கொண்டார். மாவோவும் பெற்ற தாயுடன் இனி தங்க முடிவு செய்துள்ளார்.