ஆடுஜீவிதம் திரைப்படத்தின் படப்பிற்காக ஜோர்தான் சென்றிருந்த போது கொரோனா முடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கிய்ருந்த பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் மலையாள படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ஜோர்டான் சென்றிருந்தது. பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது.
இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
இதனிடையே வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரும் படக்குழுவினர் 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஜோர்டானில் இருந்து டெல்லி வந்த அவர்கள், பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் இன்று காலை கேரளாiகொச்சினுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய ஆடுஜீவிதம் படக்குழு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம், கேரளா