அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய நிலையில் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (மே-21) இரவு உயிரிழந்துள்ளார்.
42 வயதுடைய ஜயவிக்கிரம என்ற இராணுவச் சிப்பாய் சுவாசப் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரியை சந்தேகத்தின் அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை கிடைத்ததுமே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் குறித்த ஆரம்ப கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை