கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள பொதுத் தேர்தலை சுகாதாரப் பாதுகாப்புடன் நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கை அடுத்தவாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட உள்ளது.
தற்போதைய சுகாதார நிலைமையின் கீழ், எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கையை அடுத்தவாரத்துக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கவும், அது தொடர்பிலான வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் அக்குழு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை