தமிழ்நாட்டில் இன்று (மே-22) புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பாதிப்பு 786 ஆக ஏற்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுடன், இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை