Wednesday 24th of April 2024 07:17:29 AM GMT

LANGUAGE - TAMIL
நடிகர் சோலங்கி திவாகர்
நடிகரின் வாழ்கையை புரட்டிப் போட்டது கொரோனா முடக்கம்!

நடிகரின் வாழ்கையை புரட்டிப் போட்டது கொரோனா முடக்கம்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தொடரும் ஊரடங்கு நடிகர் ஒருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE