"முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப் படைத்தளம் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடம் போன்றே இயங்குகின்றது. இதனால் பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை."
- இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கேப்பாப்பிலவு விமானப் படைத் தளம் தனிமைப்படுத்தல் நிலையமாகச் செயற்படுகின்றது. இங்கு கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த முகாமிலிருந்து எவரும் வெளிச் செல்ல முடியாது. அங்கு பணியாற்றுகின்றவர்கள் கூட, அந்த முகாமினுள் பிறிதொரு இடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கூட முகாமை விட்டு வெளியேற முடியாது. எனவே, முகாமிலிருந்து எவரும் சமூகத்துக்குள் வரமுடியாது. மக்கள் அச்சமடையத் தேவையில்லை" - என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு