அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டாலும் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.
நாங்கள் கொரோனா வைரஸை முற்றாக ஒழிக்கவே போராடுகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை எனவும் அவா் குறிப்பிட்டாா்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறித்து எச்சரிக்கப்படுகிறதே. நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா? என மிச்சிகன் மாகாணத்தில் போர்ட் கார் உற்பத்தி தொழிற்சாலையை செயற்பாடுகளை பாா்வையிட வந்த ட்ரம்பிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு முடங்கியிருப்பதற்காக ஒரு நாடு அல்ல. ஒரு போதும் முடிவுறாத முடக்கம் பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். எனவும் ட்ரம்ப் கூறினாா்.
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி வருகிறது. தொற்று நோயாளா் எண்ணிக்கையும் 16 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
எனினும் அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்பட்டு பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா