Thursday 28th of March 2024 04:20:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் மன்னிப்புக் கோரினார்!

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் மன்னிப்புக் கோரினார்!


தற்கொலை செய்துகொள்ள நான் எடுத்த தவறான முடிவால் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டேன். அதற்காக மன்னிப்புக் கோருகிறேன் என மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்ற யுவதி தெரிவித்துள்ளாா்.

தலவாக்கலை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியை தலவாக்கலை பொலிஸ் பொறுப்பதிகாரி ருவான் பொ்னாண்டோ நேற்று பாா்வையிட்டாா்.

இதன்போதே தனது தவறான முடிவால் இன்னொருவா் உயிா் பிரிந்துவிட்டதை எண்ணிக் கவலைப் படுவதாக அந்தப் பெண் தெரிவித்தாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினாா்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறியதுடன், உயிரிழந்த இளைஞனின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தினைரை சந்திக்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தண்ணீரில் குதித்த என்னை அந்த நபா் காப்பாற்ற முயன்றார். நான் அவரது கையைப் பிடித்தேன். பின்னர் நாங்கள் இருவரும் நீருக்கடியில் சென்றோம். என்னால் மேலே வர முடிந்தது. ஆனால் அவர் மேலே வரவில்லை. யாரோ ஒருவர் தண்ணீருக்கு ஒரு ரியூப்பை போட்டது எனக்கு நினைவுள்ளது. தலவாக்கலை பொறுப்பதிகாரி என்னை மீட்டாா். அவருக்கு நன்றி கூறுகிறேன் எனவும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த யுவதி தெரிவித்துள்ளாா்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE