இலங்கையின் பொதுநிர்வாகம், உள்விவகாரம், மாகாணம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் ஆளுகைக்குள் உள்ள ஆறு நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச குறித்த நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.