Saturday 20th of April 2024 08:46:52 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா தொடர்பில்
இலங்கை - இந்திய அரச தலைவர்கள் தொலைபேசியில் உரையாடல்!

இலங்கை - இந்திய அரச தலைவர்கள் தொலைபேசியில் உரையாடல்!


கொரோனா நெருக்கடி நிலை தொடர்பிலும் சுகாதார, பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் தொலைபேசி ஊடான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

இன்று காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்று இந்தியப் பிரதமர் வாக்குறுதி வழங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதார மேம்பாட்டினை முன்னெடுப்பதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு சுருக்கமாக விளக்கியிருக்கின்றார்.

இந்தியாவின் பங்களிப்புடன் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

இதன் போது இலங்கையில் இந்திய தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஆரோக்கியம் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE