Saturday 20th of April 2024 08:22:44 AM GMT

LANGUAGE - TAMIL
செவ்வாய் தொடக்கம்
கொழும்பு உட்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு தளர்வு!

கொழும்பு உட்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு தளர்வு!


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தளர்கின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE