இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதனால் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்றைய நாள் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660 என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை