Wednesday 24th of April 2024 04:59:46 PM GMT

LANGUAGE - TAMIL
அரசமைப்புப் பேரவையில் முறைப்பாடுகளை
ஹுலுக்கு எதிராக முறையிட தேசப்பிரிய தீர்மானம்!

ஹுலுக்கு எதிராக முறையிட தேசப்பிரிய தீர்மானம்!


"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன. இது தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் அரசமைப்புப் பேரவையில் முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளேன்."

- இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான் நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே காணப்பட்டன. ஆனால், ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை. ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பை கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன்.

பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார். அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள், முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எந்தவொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்தநிலையில் பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள், ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். உள்ளுக்குள் தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்து விட்டு வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அவரது இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசமைப்புப் பேரவைக்குத் தெளிவுபடுத்தி கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளேன்.

ஆணைக்குழுவின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் அதன் தவிசாளர் என்ற ரீதியில் எந்த நடவடிக்கையையும் எடுக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. ஏதாவது பிரச்சினை என்றால் அது தொடர்பில் ஆணைக்குழுவை நியமித்த அரசியலமைப்புப் பேரவைக்குத் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமையவே இந்தக் கடிதத்தை எழுத தீர்மானித்துள்ளேன்.

எதிர்வரும் 25ஆம் திகதி கூடும் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டத்தை அடுத்து இந்த முறைப்பாட்டை அரசமைப்புப் பேரவைக்குத் தெரிவிக்கவுள்ளேன். அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளேன். இந்த முறைப்பாடு தொடர்பில் அரசமைப்பு பேரவை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நான் தொடர்ந்தும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE