Wednesday 24th of April 2024 12:42:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் தாயை தேடி அலைந்த யானைக்குட்டி மீட்கப்பட்டது!

வவுனியாவில் தாயை தேடி அலைந்த யானைக்குட்டி மீட்கப்பட்டது!


வவுனியாவில் அநாதரவாக அலைந்து திரிந்த யானைக்குட்டி ஒன்று சிவில் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா பொகஸ்வெவ எனும் பகுதியிலே தாயின் துணையின்றி அநாதரவாக தேடியலைந்த ஆண் யானைக்குட்டியே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானைக் குட்டி நேற்று (23) தன் தாயினை தேடியபடி சிவில் பாதுகாப்பு படை தளத்திற்கு அருகில் வந்துள்ளது. இதனையடுத்து குறித்த யானைக்குட்டியினை சிவில் பாதுகாப்பு படையினர் பிடித்து வவுனியா வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் .

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைக்குட்டியை மீட்டு வவுனியா கொண்டு வந்துள்ளதுடன் கிளிநொச்சி அல்லது அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரியை அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் அதனை காட்டுப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE