Wednesday 24th of April 2024 10:51:11 PM GMT

LANGUAGE - TAMIL
விளையாட்டு
கட்டுப்பாடுகளை தளா்த்திய பின் கோல்ஃப் விளையாடிய ட்ரம்ப்

கட்டுப்பாடுகளை தளா்த்திய பின் கோல்ஃப் விளையாடிய ட்ரம்ப்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை தனது வர்ஜீனியா கிளப்பில் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டிருந்தாா்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடியை அடுத்து கடந்த மாா்ச் மாதம் தேசிய அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டு சமூக முடக்கல்கள் அறிவிக்கப்பட்ட பின்னா் கோல்ஃப் மைதானத்துக்கு அவா் விளையாட வந்த முதல் சந்தா்ப்பம் இதுவாகும்.

வர்ஜீனியாவின் ஸ்டெர்லிங் நகரில் உள்ள தனது சொத்தான ட்ரம்ப் தேசிய கோல்ஃப் கிளப்புக்கு காலை 10:27 மணிக்கு அவா் வந்து சேர்ந்ததாா். ஜனாதிபதியுடன் அவரது கோல்ஃப் கூட்டாளர்கள் நேற்றுக் காணப்படவில்லை. எனினும் கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்புடன் ரகசிய சேவை உறுப்பினர்கள் முக கவசங்களை அணிந்தவாறு காணப்பட்டதாக சி.என்.என். தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டில் பேசிய வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழு அதிகாரி டாக்டர் டெபோரா பிர்க்ஸ், அமெரிக்கர்கள் இந்த வார இறுயை பொது வெளியில் அனுபவிக்கலாம். ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனக் கூறினாா்.

இந்த வார இறுதியில் நீங்கள் வெளியே செல்லலாம். நீங்கள் கோல்ஃப் விளையாடலாம், மட்டுப்படுத்தப்பட்ட நபா்களுடன் டென்னிஸ் விளையாடலாம். கடற்கரைகளுக்கு செல்லலாம். ஆனால் நீங்கள் 6 அடி சமூக இடைவெளியைப் பேணவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE