Thursday 18th of April 2024 11:53:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவது குறித்து மீள்பரிசீலனை!

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவது குறித்து மீள்பரிசீலனை!


"வெளிநாடுகளிலிருந்து விசேட விமானங்கள் மூலம் அழைத்து வரப்படும் இலங்கையர்கள் பலருக்குக் கொரோனா தொற்று இருப்பதால் உடனடியாகக் கூடுதல் அளவில் இலங்கையர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கின்றது."

- இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று காலை சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் கூறியதாவது:-

"நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 52 பேரில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள். இருவர் கடற்படைச் சிப்பாய்கள். ஒருவர் இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியவர்.

உள்ளூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் பலருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்படுவதால் பெருந்தொகையான இலங்கையர்களை ஒரேயடியாக அழைத்து வருவது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலை தொடர வேண்டும்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE