கொழும்பில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் உணவகங்களை திறக்க நாளை முதல் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளாா்.
சுற்றுலாத்துறையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மட்டுமே நாளை முதல் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் அவா் கூறினாா்.
எனினும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது சுகாதார, பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவற்றைக் கண்காணிக்க 6 குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் டாக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளாா்.