Friday 19th of April 2024 11:44:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
சமீபத்தில் பிரேசில் சென்றவா்கள்  அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!

சமீபத்தில் பிரேசில் சென்றவா்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!


கடந்த 14 நாட்களுக்குள் பிரேசிலிலுக்குச் சென்ற வெளிநாட்டவா்கள் எவரும் அமெரிக்காவுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடாக பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவை அடுத்து உலகில் அதிகளவானவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நாடாக பிரேசில் உள்ளது.

இதுவரை அங்கு 3 இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 22,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய தொற்றுநோய்ப் பரவல் அமெரிக்காவிற்குள் ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கெய்லீ மெக்னனி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இரு வாரங்களுக்குள் பிரேசிலுக்குச் சென்ற அமெரிக்கா்கள் அல்லாத எவருக்கும் இந்தத் தடை பொருந்தும். இந்தத் தடை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை பாதிக்காது எனவும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்று நோய் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாக இருந்தாலும் அந்நாட்டு ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ இதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை முகக் கவசம் அணியாமல் அவா் சந்தித்து கலந்துரையாடியது விமா்சனங்களை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE