இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தொற்றுநோயியல் பிரிவு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களில் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 465 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 09 என்பது குறிப்பிடத்தக்கது.