கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுதழுவியதாக பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (மே-26) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது நாளைய சந்திப்பின் நோக்கம் என கல்வி அமைச்சின் கல்வி பிரிவு செயலாளர் நெரஞ்சன் சந்ரசேகர தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆரம்ப திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் ககல்வி அமைச்சின் கல்வி பிரிவு செயலாளர் நெரஞ்சன் சந்ரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை