Tuesday 23rd of April 2024 10:08:29 AM GMT

LANGUAGE - TAMIL
குவைத்தில் இருந்து திரும்பியவர்கள்
மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த தொற்று 1,162 ஆக உயர்வு!

மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த தொற்று 1,162 ஆக உயர்வு!


இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட குறித்த 14 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1162 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE