Friday 19th of April 2024 06:35:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1182 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1182 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் 16 ஆல் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1182ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 695 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,182 பேரில் தற்போது 478நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று உயிரிழந்திருந்தார்.

இதனால் தற்போது தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE