சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த 12 உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் பேச்சுகளை நடத்தியுள்ளனர்.
கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே இந்தப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை