Friday 29th of March 2024 05:15:52 AM GMT

LANGUAGE - TAMIL
ஒன்றாரியோ
ஒன்றாரியோவில் இன்று 440 பேர் பாதிப்பு! 29 கொரோனா மரணங்கள் பதிவு!!

ஒன்றாரியோவில் இன்று 440 பேர் பாதிப்பு! 29 கொரோனா மரணங்கள் பதிவு!!


ஒன்ராறியோவில் இன்று மேலும் 404 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மாகாணத்தில் இன்று மேலும் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று பதிவான புதிய நோயாளர்களுடன் மாகாணத்தில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,904 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 76 வீதம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த 29 பேருடன் மொத்த உயிரிழப்புக்கள் 2,102 ஆக அதிகரித்துள்ளது.

மாகாணத்தில் கொரோனாவால் இறந்தவர்களில் 1,323 பேர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் இருந்தவர்கள் என ஒன்ராறியோ பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ஆனால் இறந்த 1,531 பேர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் இருந்தவர்கள் என நீண்டகால பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் திரண்டல்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த எண்ணிக்கை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று மாகாணத்தில் 8,170 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மாகாணத்தில் நாளாந்த சோதனை இலக்கை விடக் குறைந்த எண்ணிக்கையாக உள்ளது.

மாகாணத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளைக் குறித்துக் கவலைப்படாமல் அனைவரும் தங்களைச் சோதனை செய்துகொள்ள முடியும் என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE