Thursday 18th of April 2024 05:19:33 AM GMT

LANGUAGE - TAMIL
மீட்டு நடவடிக்கை தொடங்கியது
முகமாலையில் காணப்படுவது பெண் போராளிகள் மனித எச்சங்கள்? (காணொளி)

முகமாலையில் காணப்படுவது பெண் போராளிகள் மனித எச்சங்கள்? (காணொளி)


கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது காணப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட எச்சங்களை மீட்கும் நடவடிக்கை தற்போது கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி.சரவணானந்தராஜா முன்னிலையில் நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணப்படுகின்ற எச்சங்களில் இரண்டு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் இரண்டும் பெண்களின் ஆடைகளுடன் காணப்படுவதால் அவை பெண் போராளிகளினுடையவையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தினை பார்வையிட்டுள்ள நீதிபதி அந்தப் பகுதியில் மேலும் எச்சங்கள் இருக்கிறதா? என்பது தொடர்பிலும் அகழ்வினை மேற்கொள்ளுமாறு பணித்திருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை இரண்டு துப்பாக்கிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளும் காணப்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர்கள் குறித்த எச்சங்களை கண்ணுற்று பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமை தெரிந்ததே.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE