போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவை அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர் இவ்வாறு இடைநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஷெஹான் மதுஷங்க தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தொடர்பான விசாரணகைள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முடியும் வரை எவ்வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்குபற்ற முடியாது எனவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை