மருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரீட்சைகளை முன்னிட்டு, பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னையி செய்தி...
மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தொடரும் வகையில் அவர்களுக்கு மாத்திரம் பல்கலைக் கழகங்களை மீளவும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களது கற்கையை தொடரும் வகையில் பல்கலைக் கழகங்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்கள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.