இன்று புதிதாக மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,189 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
குறித்த 07 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,189 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை