மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களது எண்ணிக்கை 1,200 ஐ கடந்து 1,201 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 479 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை