சற்று முன்னர் காலமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லேவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சகிதம் இன்று சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவில் நிதி செயலாளர் மருதபாண்டி ரமேஷ், உப தலைவர் செந்தில் தொண்டமான், இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்திய அரசால் மலையக மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடமைப்பு திட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் குடிதண்ணீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் அவர் உயிரிழந்திருக்கின்றமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.