உலகெங்கும் பரவி அச்சுறுத்திவரும் ஆட்கொல்லி வைரஸ் கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பலியானவர்களது எண்ணிக்கை சற்று முன்னர் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு ஒரு லட்சத்து 30 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அமெரிக்காவில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி 17 லட்சத்து 13 ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 669 பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா, உலகம்