Saturday 20th of April 2024 01:46:41 AM GMT

LANGUAGE - TAMIL
பாவனா!
தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பாவனா!

தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பாவனா!


தமிழ்த் திரைப்பட நடிகை பாவனா கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பாவனா மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழ் திரைத்துறைக்கும் அறிமுகமாகியிருந்தார். சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பாவனா தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக திகழ்ந்திருந்தார்.

கன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பெங்களுருவில் தனது கணவருடன் வசித்து வந்த பாவனா, கொரோனா ஊரடங்கால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், பாவனா அரசிடம் முறையாக அனுமதி பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவரை வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE