கண்டாவளை பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் தர்மபுரம் தொடக்கம் பரந்தன் வரையான ஏ35 வீதி துப்பரவு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பணி இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது, விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்களிப்பில் குறித்த துப்பரவு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த துப்பரவு பணி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பொலித்தீன் உள்ளிட்ட உக்கும், உக்காத கழிவு பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையாக சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி