Thursday 18th of April 2024 06:50:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
பக்கம் மாறி மிதிவண்டி ஓடிய சிறுவன்! மீசாலை விபத்தில் மூவர் படுகாயம்!

பக்கம் மாறி மிதிவண்டி ஓடிய சிறுவன்! மீசாலை விபத்தில் மூவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மீசாலைப் பகுதியில் சிறுவன் பயணித்த மிதிவண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 3.30 மணியளவில் மிதிவண்டியில் பயணித்த சிறுவன் வலது பக்கத்தில் பயணித்ததால் எதிர்திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

மூவரும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE