Friday 29th of March 2024 08:26:11 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
இலங்கையில் கொரோனா பாதிப்பு 1,370 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு 1,370 ஆக அதிகரிப்பு!


யாழ். கொடிகாமம், விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 51 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு இன்று மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,370 ஆக அதிகரித்துள்ளதாக இன்று (மே-27) மு.இரவு 7.00 மணிவரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சிகிச்சையின் பின்னர் 732 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 628 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 10 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE