மலையக மக்களின் உரிமைக்காக - விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்து திடீரென மரணித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு இரா.சம்பந்தன் இரங்கல் செய்தியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இன்று வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை