Friday 29th of March 2024 08:33:47 AM GMT

LANGUAGE - TAMIL
முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளாவில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்றும் 40 பேருக்கு கொரோனா தொற்று!

கேரளாவில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்றும் 40 பேருக்கு கொரோனா தொற்று!


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மொத்த கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதலாவது கொரோனா தொற்றாளர் கேராவில் கண்டறியப்பட்டிருந்த நிலையில் இந்தியளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலமே முதலிடத்தை வகித்து வந்தது. பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

பல நாட்களாகக எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் இனம் காணப்படாத நிலை காணப்பட்டிருந்தது. அண்மைய நாட்களில் கேரளாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்தான் கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

இதுவரை சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, கேரளா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE